கடந்த 25-02-2010 வியாழன் இரவு மவுலவி சக்கீன் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் புரைதா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் மார்க்கச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சகோதரர் அப்துல் அஜிஸ் அவர்களின் கிராத்துடன் நிகழ்ச்சி துவங்கியது சகோதரர் பக்கீர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மவுலவி அபுகாலித் அவர்களின் உரையைத் தொடர்ந்து ரியத்திலிருந்து வருகை தந்திருந்த மவுலவி ஜமால் முஹம்மது பாஸில் பாகவி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து மவுலவி இஸ்மாயில் உமரி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
புரைதா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலிருந்து பெரும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
சகோதரர் குர்ஷித் அவர்களின் கேள்வி பதில்களுக்குப் பின் சகோதரர் சையது யூசுப் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.