பெட்ரோல், டீசல் விலை உயர்வு:மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம் நடத்த மனிதநேய மக்கள் கட்சி முடிவு
கமுதி,மார்ச் 7: பெட்ரோல், டீசல் மற்றும் அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மனிதநேய மக்கள் கட்சி முடிவுசெய்துள்ளது.
கமுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் முகம்மது காசீம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் சாதிக் ஜபருல்லா முன்னிலை வகித்தார். நகரச் செயலர் சேட் வரவேற்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், கமுதி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அஜீஸ் கனி, கலிமுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Source Dinamani
|